Friday, February 15, 2013

ஆரோக்கிய சமுதாயமும் அக்கா கனிமொழியும் . . .

யாராவது வந்து நம்மளை தொ.கா. ல நேரடி ஒளிபரப்பு விவாத நிகழ்ச்சிக்கு கூப்பிட்டா என்ன செய்யனும்?

தலைப்பு என்ன? (காதலர் தினம் கலாச்சார சீரழிவா?)

தலைப்பை நாம ஆதரச்சு பேசப் போறோமா? இல்லை எதிர்க்ப் போரோமா? (ஆதரித்து)

யாரெல்லாம் பேச வராங்க? (கனிமொழி, அர்ஜுன் சம்பத், பாமாக வக்கீல், பெண் சமூக ஆர்வளர், அப்பறம் ஒரு பொறம்போக்கு!)

ஒரு பேச்சாளனுக்கு மகளாப் பொறந்ததால நாம எங்க வேணா, எப்படி வேணா பேசலாம்-னு நெனச்சு பேசினா இப்படி மானங்கெட்டுத்தான் வரனும்.

"பெரியதனக் காக்கா பீ திங்கப் போச்சா எறகெல்லாம் பீயாச்சாம்" - சின்ன வயசில மெத்தப்படிச்ச மேதாவி கணக்கா ஏதாவது செஞ்சு பல்பு வாங்கினா எங்க பாட்டி இப்படித்தான் திட்டுவாங்க.

அதே கணக்கா நேத்து கனிமொழி தொ.கா.ல வந்து நாறிப்போனாங்க .

காதலுக்கு நாங்க தான் காவக்காரங்க?

சாதி ஒழியனும்னா காதல் செய்வீர்? சுயமரியாதை மணம் புரிவீர்!

18 வயசானவங்களை காதலிக்க கூடாதுனு சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது?

அப்பிடி இப்பிடின்னு என்னா ஒரு அலப்பரை.

யாறாவது இந்தக்கேள்விய கனியப்பாத்து கேக்க மாட்டாங்களான்னு ஏங்கிடிருந்தேன்!

நிகழச்சி முடியப்போறப்ப நம்ம வக்கீலு கேட்டாருயா அந்தக் கேள்விய! செருப்பால அடிச்சமாதிரி....

இந்தமாதிரி எத்தனை வாங்கிருக்கோம்; அரசியல்ல இதெல்லா சாதாரணபப்பா ன்னு எந்திரிச்சு போய்டாங்க

அவங்க அப்பா, நம்ம முன்னால்!
 
ஹிந்தி படிக்காதீங்கனு சொல்லி நம்மளை வடக்க தலைவச்சு படுக்க உடுல

அப்புறமா திராவிடத்தை காப்போம்! ஜாதியை ஒழிப்போம்! னு கொள்கைய முழங்கி, யாரையோ எதிர்க்கிறதுக்கு, தாழ்தப்பட்டடவர்களை உயர்த்தப்போவாதாக கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறாரு.

இப்ப அவரோட தவப் புதல்வி சுயமரியாதை திருமணம் மட்டும்தான் ஆரோக்கிய சமுதாயத்தை அமைக்கும்-னு கூவறாங்க.

சமுதாயம்னா என்ன? பலதரப்பட்ட மக்களும் ஒத்துமையா இருக்கிறது தான் சமுதாயம்.

கலாச்சாரம்னா? ஒருவனுக்கு ஒருத்தி னு வாழ்றது நம்ம கலாச்சாரம்.

ஒருவனுக்கு ஒருத்தினு பலதரப்பட்ட மக்களும் ஒத்துமையா இருக்கிறது தானே ஆரோக்கியமான சமுதாயம்?

இப்ப நாம அப்படித்தானே இருக்கோம்.

அப்ப கனி என்ன சொல்ல வருது? யாறாவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.

கரகாட்டக்காரன் படத்தில கவுண்டரப்பாத்து செந்தில் கேட்ட கேள்விய கொஞ்சம் நாகரீகமா கேட்டாரு பமக வக்கீல்.

Wednesday, February 6, 2013

மந்திரியும் அவரது (மானமுள்ள) மனசாட்சியும்

செய்தி:

மத்திய அரசு, 70% எண்ணையை இறக்குமதி செய்து, அதனை பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக வினியோகம் செய்கிறது. இந்த நிறுவனங்களின் வருவாய் இழப்பை சரி செய்வதற்க்காக, இரட்டை முறை டீசல் விலையை அறிவித்திருக்கிறது. அதன் படி,

சில்லரை விற்பனையில் 1லி. டீசல் ரூ.50.68 (0.55பை. அதிகரித்து)-க்கும், மொத்தமாக வாங்குபர்களுக்கு 1 லி. டீசல் ரூ. 60.95 (ரூ.11.81 அதிகரித்து)-க்கும் விற்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு போக்குவரத்திற்கு, ஒரு நாளைக்கு தோராயமாக 2 கோடி வரை கூடுதல் செலவுபிடிக்கும்.  இந்தச் செலவைக் குறைக்க, அரசு பேருந்துகள் தனியார் விற்பனை நிலையங்களில் எண்ணை நிரப்புகின்றன.

இதுகுறித்த நம் கேள்விகளுக்கு ஒரு மந்திரியும் அவருடய மனசாட்சியும் அளித்த பதில்கள்:
 
ஏன் இந்த விலையேற்றம்?

மந்திரி (ம):
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 1,70,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிறுப்பதால் அதனை சரி செய்யவே இந்த விலை ஏற்றம்.

மந்திரியின் மனசாட்சி (ம.ம): ஆனா நஷ்டம் கிடையாது; போனவருட நிகர லாபம் 4,000 கோடின்னு பேப்பர்ல படிச்சும் கூட கேக்கிறாம் பாரு டீட்டெய்லு . . .

மத்திய மற்றும் ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப் படுவார்களே?

ம: நம்முடைய பொருளாதாரம் சரிந்துவிடாமல் இருக்க நாம் இதனை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். நாம் நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தாவிட்டால் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்யாது.

ம.ம: யாரக்கேட்டாலும் துபாய்ல இருந்து பணம் வருதுங்கரா சிங்க்பூர்ல இருந்து வருதுங்கரான். ஏன் நம்ம நாட்ல பணமே இல்லியா?

அந்நிய முதலீட்டைப் பெற இந்த அரசு என்ன முயற்சி செய்துள்ளது?

ம: அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,70,000 கோடியை தனியார் நிறுவனங்களுக்கு மானியமாக தந்துள்ளோம்.

ம.ம: இந்த நிதிய வச்சு நதிகளை இணைச்சா விவசாயம் பெருகும். வருமை ஒழியும். ஆனா அரசியல் ?

அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் ஏழைமக்களின் வாழ்க்கையை எந்த அளவு உயரும்?

ம. அந்நிய நிறுவனங்கள் வந்ததால இப்ப எல்லோரும் செல்போன் பயன்படுத்றாங்க. இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில தொழில் தொடங்க ஆர்வமா இருக்காங்க. அவங்களும் வந்தா நாம எங்கியோ போயிடுவோம்.

ம.ம: இந்தியாவையும் அதன் இறையான்மையையும் என் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாப்பேன் -னு சத்தியப் பிரமாணம் எடுத்துக்கிட்டு பதவிய காப்பாத்திக்க இப்ப நாட்டையே அடமானம் வெக்கப் போறேன்.

இந்த அரசுக்கு ஏழை மக்களை முன்னேற்றத்தில் அக்கரை இல்லையா?

ம: நமது நிதி அமைச்சர் அவர்களின் முயற்சியால் சாப்பாடிற்கே வழியில்லாவன் கூட பட்டப் படிப்பு படிக்க முடிகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 1,00,000 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது.

ம.ம: படிக்க வச்சு அவனையும் அந்நிய முதலாளிகளுக்கு அடிமைதான் ஆக்கப்போறோம். இந்தியா எப்படி வல்லரசாகும்? சோத்துக்கே அந்நிய நாடுகளை எதிர்பாத்து நிக்கப்போறோம்.

குறிப்பு-1 தகவல்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி கோபண்ணா ஒரு தொ.கா. பேட்டில சொன்னது. கேள்வி நான் கேக்க நினைச்சது.

குறிப்பு-2 அவரின் கூற்றுப்படி இந்தியாவில் தான் டீசல் விலை குறைவாக உள்ளது.

Friday, February 1, 2013

ஆழ்ந்த அனுதாபங்கள்


விஸ்வரூபம் பிரச்சனைல மூஸ்லீம்கள் அவங்க மதத்தை இழிவாக காட்டியதத் தாங்கமுடியாம பொங்கிட்டாங்கன்னு நானும் பதிலுக்கு பொங்கிட்டேன். அது ரொம்பத் தப்புனு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். தன்னோட சுய லாபத்துக்காக அவங்களை பலிகடாவாக்கி நம்மளை கோமாளியாக்க திட்டம் போட்டிருக்காங்க. நல்ல வேளை அவுங்க மாட்டிட்டாங்க நாம முழிச்சுக்கனும்.

தமிழ்நாட்டல இப்ப பாலாறும் தேனாறும் பாய்ந்து, மக்கள் யாவறும் சுபிட்சாமாக இருப்பதால வரப்போர நாடளுமன்றத் தேர்தல்ல 40 இடங்கள்ல ஒன்னக்கூட,  ம்ம் பிரச்சாரத்துக்கு தெருவில கூட இறங்கமுடியாத நெலம.

மத்திய அரசும் தன் பங்கிற்கு மக்களை சுபிட்சமாக வாழவைக்க கடுமையாக போரடிக்கொண்டிருப்பதாலும் அதற்க்கு உறுதுணையாக அன்னையின் மகனையும் களத்தில் நிறுத்தியிருப்தாலும், பா.ஜ.க. வின் பிரதம வேட்பாளருக்கு இந்தமுறை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை அறிந்து, பதவியேற்ப்பு விழாவிற்கு நேர்ல போய் வாழ்த்திட்டு கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.

கூட்டணி முடிவானாக்கூட ஓட்டு வாங்க என்ன செய்ய? 40ல ஒரு 35 ஆவது கெடைச்சாத்தான் ஒரு 3 வருசத்துக்கு இந்த கோர்ட்டு கேஸு  ன்னு அழைய வேண்டியதில்ல. நிம்மதியா நாட்ல ஓய்வெடுக்கலாம்.  அய்யா இந்த வாட்டி தனியா நின்னாக்கூட 30 எடத்தை புடிச்சிடுவாறு. என்ன செய்யலாம்?  அப்பத்தான் நம்ம உலக நாயகன் முஸ்லீம் அமைப்புகளுக்கு நல்லெண்ண அடிப்படைல விஸ்வரூபத்தை காட்ட

அதோட, புத்தக வெளியீட்டு விழாவில தலமைக்கு ரொம்ப வேண்டியவரை வருங்கால பிரதம மந்திரி னு எதார்த்தமா சொல்லி, படத்தையும் தரமாட்டேன், "இது என்னோட பொருள் நா யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன்னு" பேசி கடுப்பேத்த

விஸ்வரூப்தை வெளியிடுவதற்க்கு சில மணிநேரத்திற்கு முன்,  படத்தை வெளியிட்டால் முஸ்லீம்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறையும் என்பதால் இரவோடிரவாக அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் படத்திற்கு 144 தடை விதிக்க உத்தரவிட்டார் . பலியை முஸ்லீம்கள் மீது போட்டார்.

முஸ்லீம் அமைப்புத் தலைவர்கள் எல்லாம் ஒண்ணுகூடி, எங்க மத்தை கேவலப்படுத்திற வகையில இந்தப்படம் இருக்குனு சொல்ல, உயர்நீதி மன்ற நீதிபதி படத்தைப் பாரத்துட்டு, அப்படியெல்லாம் இல்லை, படத்தை வெளியடத் தடையில்லைனு சொல்ல

இதோட விட்டிருந்தா முஸ்லீம் அமைப்புகள் தான் பிரச்சனை செஞ்சாங்க. அரசாங்கம் தன் கடமையத்தான் செஞ்சுதுனு சொல்லி, நாடாளுமன்ற தேர்தல்ல பா.ஜ.க. வோட கூட்டணி அமைச்சு அநேகமா அனைத்து தொகுதியையும் ஜெயிச்சிருக்களாம்.

எப்படி?

சிறுபான்மையின அமைப்புகளெல்லாம் ஒன்னா சேந்து, உலக அளவில புகழ் பெற்ற கமலோட படத்தை, அவரோட சொந்த மாநிலத்திலயே எங்களால தடை செய்ய முடியும்; இந்தியால 20 கோடிப் பேர் இருக்கிறோம்; உலக அளவில 5 பேருக்கு 1 முஸ்லீம் இருக்கிறோம்; நானும் 15000 ஓட்டு வித்தியாசத்தில வெற்றிபெற்றிருக்கிறேனு மார்தட்டி நிக்கறாங்களே ஏன்?

ஏன்னா சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு, அவங்களை முன்னேற்றுவது  எங்களது கடமை, என்று சொல்லிப் பெரும்பாலான ஓட்டுப் பொறுக்கிகள் அவர்களை அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் பயன்படுத்திட்டு, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு அதனால பெரும்பான்மையிருக்கு ஆதரவா செயல்படற கட்சிய மதவாத கட்சினு சொல்லி வளரவிடாம செஞ்ட்டாங்க.

அவங்க அதிகாரத்தில இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை ஆயிருக்குமா? அதனால வரப்போர தேர்தல்ல அவங்களை ஏன் ஆதரிக்கக் கூடாதுன்னு நான் நினைச்ச மாதிரி ஒரு 20% மக்களாவது நினைச்சிறுப்பாங்கள்ள? அப்ப 20+20 = 40!

ஆனா, அரசு தரப்பு வழக்கறிஞர் வாங்கின காசுக்கு அதிகமா விசுவாசத்தைக் காட்ட, தூங்கிட்டிருந்த நீதிபதிய தட்டி எழுப்பி மீண்டும் தடைவிதிக்கச் சொல்லி

இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சு; இது தனிப்பட்ட விரோதம் இல்லை! அம்மா யாரையும் பழிவாங்க மாட்டாங்க! அவங்களுக்கு சம்மந்தமே இல்லாத, அவங்களே பார்க்காத தொ.கா. க்காக இந்தமாதிரி கீழ்தரமான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க! இது முழுக்க முழுக்க தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே!

ஆக நோகாம நொங்கு திங்கிறது அய்யா தான்.

இது தெரியாம இஸ்லாமிய சகோதரர்கள், நாம எதையெல்லாம் மறந்திருந்தமோ அதையெல்லாம் மறுபடியும் சொரிஞ்சு விட்ருக்காங்க பரவால.  நாங்க மனிதனை சக மனிதனாக மதிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. இனிமேலாவது சிறுபான்மை சமூகத்தை முன்னேற்றப் பாடுபடுங்கள்.

இதுல காமெடி என்னனா, ஒரு இஸ்லாம் சகோதரர் நேரடி ஒளிபரப்பில, இன்னொரு அமைப்புத்த தலைவருடைய கருத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை! அவர் எங்கள் தலைவரிடம் சொல்லமல் வந்துவிட்டார்! அடடா இந்த அமைத்தலைவர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி.

நிகழ்சியில பேசிய ஒரு பட்டிக்காட்டான் தாசாவதாரம் படத்தை மோசமாக விமர்சித்தார். நாகேஷ் குடும்பத்தில் அதிக வயசு வித்தியாசத்தில் உறுப்பினர்கள் இருப்பதாக கமல் காட்டியிறுப்பார். அது அவர்களை இழிவுபடுத்துவதாக சொன்னார்.

1999 ல், நாங்கள் இருந்த வீட்டறுகே ஒரு முஸ்லீம் குடும்பம் இருந்தது. அந்த வீட்டிலிருந்த சிறுவன் மட்டும் எங்களிடம் பேசுவான். அவர்கள் வீட்டில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் ஒரு வயதான தம்பதியரும் இருந்தனர்.

அந்த வயதானவரை சிலநாட்கள் காணாததால், நான் அவங்கிட்ட எங்கப்பா உங்க தாத்தாவை ரெண்டு நாளாக் காணோம்? னு கேட்டேன். எனக்குத் தாத்தா யாறும் கிடையாதுன்னு சொன்னான். அதற்குள் என் நண்பன் என்னை தனியே கூப்பிட்டு என்ன ஜீ இப்படிக் கேட்டுட்டீங்க அது அவங்க அப்பா!; அதுமட்டுமில்ல அவங்க அம்மா இப்ப 8 மாசம்னு சொன்னான்.  எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.

அதத்தான் தசாவதாரம் படத்தில கமல் காட்டியிறுப்பார். இதுல புண்பட என்ன இருக்கிறது. எங்க தாத்தாவுக்கு 5 பசங்க 2 பொண்ணுங்க. ஆனா இந்தளவு வயசு வித்தியாசம் கிடையாது.

முடிவாக ஒருவார கூத்துக்கு மீசையச் செரச்ச எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday, January 28, 2013

விஸ்வரூபம்



கமலின் விஸ்வரூபம் திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை கெடுத்துவிடும் என முஸ்லீம்கள் எதிர்ப்பதால், அதனை தமிழகத்தில் தடை செய்துள்ளது தமிழக அரசு.

நேற்று 24.01.2013 இரவு 10.00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியை பார்த்த பிறகு,

எனக்குத் தோன்றியவை
 
  • கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்த்து போராடக் காரணம் அப்படத்தில் தீவிரவாதிகளை முஸ்லீம்களாகக் காட்டியிருப்பது.
  • திருக்குர்ஆன்-னைப் படிப்பவர்கள் தீவிரவாதியாக இருக்கவே முடியாது - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
  • இனிமேல் யாரும் தீவிரவாதிகளை முஸ்லீம்களாகக் காட்டி படமே எடுக்கக் கூடாது. (இதுவரை ஏதாவது தீவிரவாத இயக்கத்தை உங்கள் மதத்தை விட்டு தள்ளி வைத்திருக்கிறீர்களா ?)
  • தாலிபான் தீவிரவாதிகளுக்கு தமிழ்நாட்டு முஸ்லிம் உதவி செய்வது போன்று காட்சி அமைக்கப் பட்டிருப்பதால் எங்களை பக்கத்து வீட்டு இந்துக்கள் தவறாக எண்ணுவார்கள்.
  • மொத்தத்தில் முஸலிம்-னாலே தீவிரவாதிதான் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
எனது புரிதல்கள்

மற்ற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு தமிழக முஸ்லீம்கள் வேறு
தமிழகத்தில் மட்டும் தான் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் உறவுமுறையில் பழகுகிறார்கள் (தமிழர்களுடன்)

எனது சந்தேகங்கள்

பாக்கிஸ்த்தான் புனிதப் போராளிகள் இரண்டு இந்திய வீர்களைக் கொன்று கழுத்தை அறுத்த போது நீங்கள் ஏன் போராட்டதில் இறங்கவில்லை ?

(கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாக திரு. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சொன்னார். ஆனால் அதுபற்றிய செய்தி அவர்களது வலைத்தலத்தில் இல்லை.)

இரண்டு உயிரைவிட நமக்கு சினிமாவை எதிர்பதுதானே தானே முக்கியம். (யாருக்கோ விசுவாசத்தை காட்டி எங்களை காயப்டுத்தி விட்டீர்கள். கூடுதல் இடங்கள் கிடைக்களாம் !)

சரி எங்களுக்காக போராட வேண்டாம். மலாலா-வுக்காக குரல் கொடுத்தீர்களா?

திருக்குர்ஆன் "இஸ்லத்திற்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பும் மக்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும் எனச் சொல்கிறது" - மலாலாவைச் சுட்ட புனிதப் போராளி

அது பற்றிய ஒரு கேள்வி-பதில் பகுதி

அதனால,
 
மும்பை தாக்குதல், பார்லிமெண்ட் தாக்குதல் மற்றும் மேற்சொன்ன சம்பவங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இனிமேல் சினிமாவில் தீவிரவாதிகளை முஸ்லீமாக காட்டக்கூடாது.